அடுத்தாண்டு ஐபிஎல்லில் புதிதாக களமிறங்க போகும் இரண்டு அணிகள் இது தான்! எத்தனை கோடிக்கும் ஏலம் போயுள்ளது தெரியுமா?
ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்படும் இரண்டு அணிகள் சுமார் 12,256 கோடிக்கு ஏலம் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது.
இதற்கான டெண்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிய அணிகளுக்கான ஏலம் துபாயில் இன்று நடைபெற்றது.
புதிய அணிகளுக்கான அடிப்படை விலை ரூ.2,000கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஏலத்தில் கவுதம் அதானி மற்றும் அவரது அதானி குழுமம், சஞ்சீவ் கோயங்கா தலைமையிலான ஆர்.பி.எஸ்.ஜி குழுமம், மான்செஸ்டர் கால்பந்து உரிமையாளர்களான Glazer குடும்பம் பங்கேற்றன.
இந்நிலையில், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தளமாக கொண்ட இரண்டு புதிய ஐபிஎல் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில், லக்னோ அணியை சஞ்சீவ் கோயங்கா தலைமையிலான ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் சுமார் 7090 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் 5,166 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய இரண்டு ஐபிஎல் அணிகளின் மூலம் பிசிசிஐ-க்கு சுமார் 12,256 கோடி லாபம் கிடைத்துள்ளது.