சுட்டி குழந்தை சாம் கரணை கண்டுகொள்ளாத CSK? அவரை ஏலத்தில் தட்டி தூக்க தயாராக 3 அணிகள்
சுட்டி குழந்தை சாம் கரணை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க 3 அணிகள் தீவிர முயற்சி எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎலில் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள சாம் கரன் மொத்தம் 32 போட்டிகளில் 322 ரன்களையும், 32 விக்கெட்களையும் வீழ்த்தி, சிறந்த ஆல்-ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார்.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தார். இவரை சிஎஸ்கே தக்கவைக்கவில்லை, வரும் ஏலத்திலும் அவரை அந்த அணி எடுக்காமல் போகலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 அணிகள் சாம் கரணை தட்டி தூக்க திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தா அணி
மெகா ஏலத்தின்போதும் ஆல்-ரவுண்டர்களை கொல்கத்தா அணி குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம் கரன் அவர்களது முக்கிய டார்கெட்டாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
அகமதாபாத் அணி
இந்த அணி சாம் கரன், ஷர்தூல் தாகூர், ஹார்திக் பாண்டியா போன்றவர்களை அந்த அணி ஏலம் எடுக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் இருந்து வந்தார். அவர் சிறப்பாக செயல்படாத காரணத்தினால் கழற்றிவிடப்பட்டுள்ளார். அவரது இடத்தை நிரப்ப சாம் கரனை எடுக்கலாம்.