ஐபிஎல்லில் சேர்க்கப்பட்டுள்ள 2 புதிய அணிகளின் கேப்டன் பெயர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கான கேப்டன்களின் பெயர் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அகமதாபாத் அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவையும் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானையும் தலா 15 கோடி ரூபாய்க்கும் பேட்டர் ஷுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாக அந்த அணியின் இயக்குநர் விக்ரம் சோலங்கி தெரிவித்துள்ளார்.
கேஎல் ராகுலை 17 கோடி ரூபாய்க்கும் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிசை 9.2 கோடி ரூபாய்க்கும் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்ணோயை 4 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாக லக்னோ அணி தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ அணிக்கு கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட உள்ளார்.
அகமதாபாத் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.