2022 ஐபிஎல் தொடர் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி மே இறுதி வரை நடக்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இதை உறுதிப்படுத்தினார்.
பேட்டியில் ஜெய் ஷா கூறியதாவது, ஐபிஎல் தொடரின் 15வது சீசன் மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும் என்பதை உறுதிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பெரும்பாலான அணி உரிமையாளர்கள் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் அறிமுகமாகும், 2022 ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ ஆர்வமாக உள்ளது.
2022 ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதியளித்துள்ளார்.
பிசிசிஐ கடந்த காலங்களில் அதன் பங்குதாரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளவில்லை.
அதேநேரத்தில் புதிய மாறுபாடுகளுடன் கூடிய கொரோனா நிலைமை திரவமாக இருப்பதால், பிளான் பி திட்டங்களும் வகுக்கப்படும்.
மெகா ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12-13 திகதிகளில் நடைபெறும் என கூறிய ஜெய் ஷா, அதற்கு முன் 2022 ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானங்கள் இறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.