அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கிய ஈரான் - டிரம்ப்பின் போர் நிறுத்தத்தை ஏற்க மறுப்பு
டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்தை ஏற்க ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஈரான் போர்
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலுக்கு தாக்குதல் நடத்திய நிலையில், இருநாடுகளுக்கும் இடையே போர் வெடித்துள்ளது.
இந்நிலையில், ஈரானில் உள்ள 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இதற்காக, அமெரிக்காவிற்கு நிச்சயம் பதிலடி கிடைக்கும் என ஈரான் உச்சத்தலைவர் அலி காமேனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தளம் மீது தாக்குதல்
இதனை தொடர்ந்து, கத்தாரின் தோஹாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் அல்-உதெய்த் விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
மத்திய கிழக்கில், அமெரிக்காவின் வான்வழி நடவடிக்கைகளுக்கான ராணுவ தலைமையகமாக விளங்கும் அல்-உடெய்ட் விமான தளத்தில், 100 விமானங்களும், 1000 அமெரிக்க ராணுவ வீரர்களும் உள்ளனர்.
அமெரிக்காவிற்கு எதிரான இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் பஷாரத் அல்-பாத்' (BASHARAT AL-FATH OPERATION) என பெயரிட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
10 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், அதில் 7 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், 3 ஏவுகணைகள் இலக்கை தாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போர் நிறுத்தம்
"இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு முன்னரே ஈரான் தகவல் அளித்திருந்தது. இதில், யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. இனி வெறுப்பு இருக்காது என்று நம்புகிறேன்.
இனி ஈரான் அமைதி, நல்லிணக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இஸ்ரேலுக்கும் இதையே ஊக்குவிக்கிறேன். உலகிற்கு வாழ்த்துக்கள், இது அமைதிக்கான நேரம்! அமெரிக்காவால் இனி எந்த பதிலடியும் இருக்காது" என டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானிய புரட்சிகர காவல்படையினரால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், கத்தார் நாட்டின் இறையாண்மையையும், வான்வெளி சட்டத்தையும், சர்வதேச சட்டத்தையும் அப்பட்டமாக மீறியதாகும் என கத்தார் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கத்தாரின் மீதான தாக்குதலை கண்டித்துள்ளது. கத்தாரின் அண்டை நாடான பஹ்ரைனில், முன்னெச்சரியாக சைரன் ஒலி எழுப்பியுள்ளது.
மேலும், கத்தார் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ள நிலையில், தோகா விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் திருப்பி விடப்படுகின்றன.
ஈரான் மறுப்பு
அமெரிக்கா போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, "எந்தவொரு போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.
As Iran has repeatedly made clear: Israel launched war on Iran, not the other way around.
— Seyed Abbas Araghchi (@araghchi) June 24, 2025
As of now, there is NO "agreement" on any ceasefire or cessation of military operations. However, provided that the Israeli regime stops its illegal aggression against the Iranian people no…
இஸ்ரேல் ஈரான் மீது போரை தொடங்கியது, இஸ்ரேஸ் ஈரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பை, தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |