நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும்
ஈரானின் திருப்பியடிக்கும் துணிச்சல், ட்ரோன்களின் உற்பத்திக்கும் அவற்றைச் சுட்டு வீழ்த்துவதற்கான மிகப்பெரிய செலவுக்கும் இடையில் வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வை அம்பலப்படுத்தியுள்ளது.
ஒரு அதிரவைக்கும் விவகாரம்
ஈரான் பயன்படுத்தும் சக்திவாய்ந்த ட்ரோன்களுக்கான உற்பதி செலவு என்பது தோராயமாக 35,000 டொலர் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட மேற்கத்திய நாடுகளால் அதை சுட்டு வீழ்த்துவதற்கான செலவு குறைந்தது 500,000 டொலர் முதல் 4 மில்லியன் டொலர் வரை என மதிப்பிடுகின்றனர்.

இப்படியான ஒரு அதிரவைக்கும் விவகாரம் தற்போதைய இஸ்ரேல் தொடங்கி வைத்த ஈரானுக்கு எதிரான போரில் அம்பலமாகியுள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் தொடுத்ததன் பின்னர்,
ஈரான் இஸ்ரேல் மீதும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் தளங்கள் மீதும் நிறுத்தாமல் சுழன்று தாக்குதல்களை நடத்துகிறது.
ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட முனைகளில் தாக்குதல்களைப் பரப்புவதன் மூலமும், ஒரு நாளைக்கு 2,500க்கும் மேற்பட்ட ட்ரோன்களைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலமும், ஈரான் அதன் எதிரிகளை தங்கள் பாதுகாப்பு அரண்களைப் பிரிக்க கட்டாயப்படுத்துகிறது.
மேலும், ஒரு தளத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஏவுகணை அல்லது ட்ரோன் தடுப்பு அமைப்பான ஒவ்வொரு Interceptor-ம் வேறு எங்கும் பயன்படுத்த முடியாத ஒன்றாகும், ஏனெனில் interceptor-கள் வரையறுக்கப்பட்டவை.
மட்டுமின்றி, சில ஆயிரம் நீண்ட தூர ட்ரோன்களுக்குப் பதிலாக, ஈரானின் மொத்த ஷாஹெத் ட்ரோன் படையானது, அனைத்து வகையும் சேர்த்து 80,000 முதல் 100,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 500 ட்ரோன்கள் வரையில் உற்பத்தித் திறன் ஈரானுக்கு உள்ளது. தற்போதைய சூழலில் நாளுக்கு 2,500 ட்ரோன்களை ஈரான் பயன்படுத்தினாலும், ஒரு மாதம் வரையில் ஈரானால் துணிந்து செயல்பட முடியும்.
ஆனால் ஈரானின் இந்த ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் interceptor-கள் போதுமானதாக இல்லை என்றே மேற்கத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதன் தாக்கம் தற்போதே தென்படத் தொடங்கியுள்ளதாகவும் நிபுணர்கள் தரப்பு குறிப்பிடுகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரான் மீதான 12 நாட்கள் போரில், இஸ்ரேலை பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்கா 150 THAAD interceptor-கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது அமெரிக்கா அதன் கையிருப்பில் இருந்து தோராயமாக கால் பகுதியைப் பயன்படுத்தியுள்ளது. அந்த interceptor-கள் ஒவ்வொன்றும் சுமார் 15 மில்லியன் டொலர் மதிப்பிலானவை, மேலும் அதை மீண்டும் நிரப்ப மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.
தற்போது, ஈரானிய தாக்குதல்களின் தீவிரம் தொடர்வதால், ஒரே நேரத்தில் பல நாடுகளில் இந்த அமைப்புகளின் தேவை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தில் interceptor-கள் மட்டும் பற்றாக்குறையில் இல்லை, கடலில் இருந்து ஏவக்கூடிய Tomahawk ஏவுகணைகள் மற்றும் விமானத்தில் இருந்து ஏவக்குடிய ஆயுதங்களும் பற்றாக்குறையில் உள்ளது அம்பலமாகியுள்ளது.
பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே
இந்த நிலையில், ஈரானுடனான போர் நான்கு வாரங்களுக்கு தொடரக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதால், ஆபத்தான இந்த பற்றாக்குறை பெரும் சிக்கலாக வெடிக்கக் கூடும்.
மட்டுமின்றி, ஈரானின் இலக்கு யார் என்று கணிக்க முடியாத நிலையில், அமெரிக்காவிடம் போதுமான interceptor-கள் இல்லை. இதனால், மலிவான APKWS ராக்கெட்டுகளை ஈரான் ட்ரோன்களுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது, ஒருமுறை பயன்படுத்த 28,000 டொலர் செலவாகும்.
சோதனை முயற்சியில் 100 சதவீதம் துல்லியம் என உறுதி செய்யப்பட்டுள்ளதால், தற்போது ஆயிரக்கணக்கான அமைப்புகளை நிறுவியுள்ளனர். இஸ்ரேலிடம் மிகவும் மலிவான Iron Beam laser அமைப்பு இருந்தாலும், வெறும் இரண்டு எண்ணிக்கை மட்டுமே வலுவாக உள்ளது.

அது இஸ்ரேலுக்கு மட்டும் பயன்படக் கூடியது. இதனாலையே, தற்போது ஈரான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால் ஈரானின் புதிய தேசிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் ட்ரோன் தாக்குதலில் சிக்கி குவைத்தில் பல அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |