ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்ணிற்கு வங்கிச்சேவை வழங்கிய வங்கி மேலாளருக்கு நேர்ந்த நிலை
ஈரானில் ஹிஹாப் அணியாமல் வங்கிக்கு வந்த பெண்ணிற்கு அது தொடர்பான சேவையை செய்த மேலாளர் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மாசா அமினி
கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி மாசா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் முழுமையாக அணியாத காரணத்தால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பொலிஸ் காவலில் இருக்கும்போது மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து ஈரான் முழுவதும் ஹிஜாப்புக்கு எதிராக பெரும் போராட்டம் மற்றும் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
iranintl/rferl
வங்கி மேலாளர்
உலக நாடுகளில் உள்ள மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். இந்நிலையில், டெஹ்ரானுக்கு அருகில் உள்ள கோம் மாகாணத்தில் உள்ள ஒரு வங்கிக்கு ஹிஜாப் அணியாத ஒரு பெண் சமீபத்தில் வந்த நிலையில் அது குறித்து வங்கி மேலாளர் பொலிசுக்கு தகவல் கொடுக்கவில்லை.
மேலும் அவருக்கு வங்கி சேவையும் வழங்கியிருக்கிறார். இதையடுத்து வங்கி மேலாளரை பணி நீக்கம் செய்து மாகாண கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரானில், பெரும்பாலான வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.