கொரோனா ஆறாவது அலையை எதிர்கொள்ளவிருக்கும் பிரபல நாடு
ஈரானில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஆறாவது அலையை எதிர்கொள்ள நாடு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நிர்வாகம் சமீப வாரங்களாக குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தூரிதப்படுத்தி வருகிறது. இருப்பினும் நாட்டின் சில பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதன் காரணமாக அடுத்த மாதத்தில் ஈரான் ஆறாவது அலையை எதிர்கொள்ள இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இருப்பினும் இயன்ற வரையில் ஆறாவது அலையை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் ஈரான் இறங்கியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஈரானும் ஒன்று.
ஈரானில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளிலும் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அதேவேளை, குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கொரோனாவால் இறப்பு அதிகமாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, கொரோனா பெருந்தொற்றால் இதுவரை 125,000 மக்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஈரானில் 5.8 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தினசரி இறப்பு எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 700 கடந்திருந்த நிலையில், தற்போது 150 என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு 10,000 என பதிவாகி வருகிறது.