ஈரான் அறிவித்த பெரும் பணப் பரிசு... ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பில் அதிகரித்த பதற்றம்
Iran unveils sick cash prize on American troops: அமெரிக்க வீரர்களைப் பிடிப்பவர்களுக்கோ அல்லது கொல்பவர்களுக்கோ பெரும் பணப்பரிசு வழங்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகளை உயிருடன் பிடிப்பவர்களுக்கோ அல்லது கொல்பவர்களுக்கோ ஈரான் அதிரவைக்கும் வகையிலான பணப் பரிசை அறிவித்துள்ளது.
படுகொலை முயற்சி
அத்துடன், ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் அந்தப் பரிசுத் தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரைக் கொல்பவருக்கோ அல்லது சிறைபிடிப்பவருக்கோ 5 பில்லியன் டோமன் (30,000 அமெரிக்க டொலர்) வெகுமதி அளிக்கப்படும் என்று ஈரான் ராணுவத் தளபதி அமீர் ஹதாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் இராணுவத்தால் வழங்கப்படும் இந்தப் பரிசு, அச்செயலை நிறைவு செய்யும் துணிச்சலான ஈரானியப் பெண்களுக்கு இருமடங்காக வழங்கப்படும் என்றும் ஹதாமி தெரிவித்துள்ளார்.
அத்தகைய தாக்குதல்கள் எங்கே அல்லது எப்போது நடைபெறும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஜனாதிபதி ட்ரம்ப் மீது ஈரான் மேற்கொள்வதாகக் கூறப்படும் படுகொலை முயற்சிகள் குறித்த கவலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரானிடமிருந்து வெளியான அச்சுறுத்தல் காரணமாக, ஜனாதிபதி ட்ரம்ப் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' (Air Force One) விமானத்திலிருந்து மற்றொரு பயணிகள் விமானத்திற்கு ரகசியமாக மாற்றப்பட்டதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியானதாக நீதித்துறை தெரிவித்தது.
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டிலிருந்து ட்ரம்ப் புறப்பட்டபோது அந்த நெருக்கடி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 18 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஈரான் அருகே F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின்போது தவிர, ஈரானில் அமெரிக்கப் படைகள் தரைவழியாக களமிறக்கப்படவில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தை
பல நாட்கள் நீடித்த அமெரிக்க சிறப்பு நடவடிக்கையை அடுத்து, ஜெட் விமானத்தில் இருந்த விமானி மற்றும் ஆயுத அமைப்பு அதிகாரி ஆகிய இருவரும் வெற்றிகரமாக உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க இராணுவமும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க-ஈரான் போர் வெடித்ததிலிருந்து பதற்றம் அதிகமாகவே இருந்து வருகிறது.
இதனிடையே, ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு கட்டமைப்பு அறிவிக்கப்பட்டது, ஆனால் அது இன்னும் இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக கிட்டத்தட்ட இரண்டு வாரம் இரவு நேரத்தில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் தொடுத்தது.
இதனால் பல மத்திய கிழக்கு நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே, ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கப் பகுதியாக அறிவிப்போம் என ட்ரம்ப் குறிப்பிட, அந்த நீர்வழிப்பாதையின் மீது அமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என ஈரான் வெளிவிவகார துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி பதிலளித்துள்ளார்.
ஆனால், எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும் ஹார்முஸ் நீரிணையின் உரிமையைத் தான் கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |