ஈரானை பழிவாங்கும் 16 வயது சிறுமியின் சாபம்? மீண்டும் கவனம் பெரும் அத்தேஃபே சஹாலே
ஈரான் போர் நடைபெற்று வரும் நிலையில், மறைந்த 16 வயது சிறுமி அத்தேஃபே சஹாலே மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.
இஸ்ரேல் ஈரான் போர்
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் அதன் மீது போர் தொடுத்துள்ளது.
இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில், ஈரானின் பல முக்கிய தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதோடு, ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் இஸ்ரேல் மீது தனது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரில், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா அதிபர் டிரம்ப், தனது விமானம் தாங்கிய போர் கப்பல்களையும்(GSC), எரிபொருள் நிரப்பும் விமானங்களை மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தி வருகிறது.
போர் 6 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் இந்த நிலைக்கு காரணம் 16 வயது சிறுமியின் மரணம் தான் என சமூகவலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அத்தேஃபே சஹாலே
ஈரானின் நேகா நகரத்தைச் சேர்ந்த அத்தேஃபே சஹாலே என்ற சிறுமி, தனது 5 வயதிலே விபத்தில் தாயை இழந்ததோடு, கார் ஆற்றில் மூழ்கியதில் தனது தம்பியையும் இழந்துள்ளார்.
அவரின் தந்தையும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானதால், தனது தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்த்துள்ளார்.
தனது 13 வயதில் காரில் ஒரு ஆணுடன் தனிமையில் இறந்ததாக கூறி கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டதோடு, 100 சவுக்கடி தண்டனையாக வழங்கப்பட்டது.
மேலும், சிறையில் அங்கிருந்த சிறை காவலாளிகளால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 2 முறை மீண்டு அதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 51 வயதான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை சேர்ந்த அலி தராபியால் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தீர்ப்பு தனக்கு எதிராக வர உள்ளதை உணர்ந்த அவர், தனது ஹிஜாப்பை கழற்றி விட்டு, தராபிக்கு தான் தண்டனை தர வேண்டும் எனக்கு அல்ல என கூறி, செருப்பை கழட்டி நீதிபதி ஹாஜி ரெசாய் மீது எறிந்துள்ளார்.
16 வயதில் தூக்குத்தண்டனை
இதைத்தொடர்ந்து சஹாலேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ஈரான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போதும், அங்கு அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 15, 2004 அன்று நேகாவில், ஒரு கிரேனில் இருந்து பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவத்திற்கு, உலக அரங்கில் இருந்து ஈரானுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
ஏனெனில், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ஈரான், 18 வயதுக்குட்பட்ட எவரையும் தூக்கிலிட மாட்டோம் என்று உறுதியளித்தது.
ஆனால் சஹாலேவின் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில், அவரது வயது 16 வயது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அவரது வயதை ஆராயாமல் வளர்ந்த உடலமைப்பை பார்த்த நீதிபதி, அவரின் வயது 22 என அறிவித்துள்ளார்.
16 வயது சிறுமியின் சபிக்கப்பட்ட சாபம் தான் ஈரானின் இந்த நிலைக்கு காரணம் என சமூகவலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |