ஈரானின் ரகசிய திட்டம்... கட்டார் உலகக் கிண்ணம் தொடர்பில் இஸ்ரேல் உளவுத்துறை கடும் எச்சரிக்கை
ஈரானில் தொடரும் மக்கள் போராட்டங்களையும் கொலைகளையும் திசைதிருப்ப, கட்டார் மீது அந்த நாடு தாக்குதல் தொடுக்கலாம் என இஸ்ரேல் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கவனத்தை திசை திருப்ப
ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதுவரை 400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தங்கள் மீதான உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பவும்,
@getty
பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை உருவாக்கவும் கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் வேளையில் தாக்குதல் தொடுக்க ஈரான் திட்டமிடுவதாக இஸ்ரேல் உளவுத்துறையின் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் பதற்றம் இன்னும் தணியவில்லை எனவும், எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கைகளை ஈரான் முன்னெடுக்கலாம் எனவும் ஹலிவா தெரிவித்துள்ளார். மேலும், ஈரானியர்கள் தற்போது கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ணம் போட்டிகளின் போது தாக்குதல் முன்னெடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
@getty
உலகக் கிண்ணம் போட்டிகளின் போது தாக்குதல்
மட்டுமின்றி, இங்கிலாந்து அணியுடன் 6-2 என்ற கோல் கணக்கில் கட்டார் தோல்வியடைந்த நிலையில், ஈரான் மக்கள் இங்கிலாந்தின் வெற்றியை கொண்டாடியுள்ளதும் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
@getty
செப்டம்பர் பிற்பகுதியில் போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து 400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கருதப்படுகிறது, மேலும் பலர் காயமடைந்தனர் மற்றும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஈரான் கால்பந்து அணியினர் தேசியகீதம் பாட மறுத்ததும், ஈரான் ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளதும் ஈரான் நிர்வாகத்தை கதிகலங்க வைத்துள்ளது.