ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி
அமெரிக்க வீரர்கள் பலர் படுகாயங்களுடன் தப்பிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் நொறுங்கியுள்ள அதிர வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
முக்கியமான கண்களில்
சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்கள், விமானங்கள் சிதைந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.

அந்த விமானங்களில் ஒன்று E-3G எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் வான் கண்காணிப்பில் மிக முக்கியமான கண்களில் ஒன்றாகத் திகழும் இந்த விமானம், வெள்ளிக்கிழமையன்று குறைந்தது ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளால் நடத்திய தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதலில் 15 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் ஐவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் அந்த விமானம் இரண்டாகப் பிளந்துள்ளது. அமெரிக்க விமானப்படையின் மிக முக்கியமான இந்த E-3 விமானமானது மிகவும் குறைந்த என்ணிக்கையிலேயே செயற்பாட்டில் உள்ளது.
தற்போது சவுதி அரேபியாவில் ஈரான் தாக்குதலுக்கு ஒரு விமானம் இலக்காகியுள்ளது. வெள்ளிக்கிழமை ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் 29 ட்ரோன்களையும் சுல்தான் விமானத் தளத்தின் மீது ஈரான் ஏவியுள்ளது.

ரியாத்திலிருந்து சுமார் 60 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த விமானத் தளம், ராயல் சவுதி விமானப்படையால் இயக்கப்பட்டு அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இராணுவக் குவிப்பு
ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து தொடர்ச்சியாக குறிவைக்கப்பட்டும் வருகிறது. ஈரான் தாக்குதலில் இதுவரை காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 300 கடந்துள்ளதாக கூறப்பட்டாலும், உண்மையான இறப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
தற்போது இரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள இந்தப் போர், ஏற்கனவே பல அமெரிக்க உயிர்களைப் பலிகொண்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவக் குவிப்பு என்று அதிகாரிகள் குறிப்பிடும் வகையில், அமெரிக்கா அப்பிராந்தியத்திற்குத் தனது படைகளைத் திரளாக அனுப்பியுள்ளது.

ஆனால், இது அமெரிக்காவிற்கு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. மொத்தத்தில், பல போர்க்கப்பல்கள் மற்றும் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களின் துணையுடன், சுமார் 50,000 அமெரிக்க வீரர்கள் தற்போது இப்பிராந்தியம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஆனால், ஒரு மில்லியன் வீரர்களுடன் இப்படியான ஒரு தருணத்திற்கு ஈரான் தயார் நிலையில் காத்திருப்பதாக அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |