ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 4.9-ஆக பதிவு
ஈரானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு நகரமான காஷ்மீரில் செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1:24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 120 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாரிய கட்டிடங்கள் இடிந்தன. பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக காஷ்மீர் ஆளுநர் ஹஜதுல்லா ஷரியத்மதாரி அறிவித்தார்.
சாலைகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஈரான் வெவ்வேறு டெக்டோனிக் தகடுகளில் இருப்பதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், துருக்கியின் எல்லைக்கு அருகே ஈரானின் வடமேற்கு மலைகளில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதேபோல் ஈரானில் 2003-ம் ஆண்டு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 31,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Iran Earthquake