போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு - இத்தனை லட்சம் கோடிகளா?
6 வார கால போரால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்த இழப்பு குறித்த ஆரம்பகட்ட மதிப்பீடுகள் வெளியாகியுள்ளது.
ஈரான் போர்
அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

6 வார காலமாக நடைபெற்ற இந்த போரில், 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள், பெட்ரோலிய வேதிப்பொருள் நிறுவனங்கள், எஃகு ஆலைகள், அலுமினியத் தொழிற்சாலைகள் ஆகியவை தொடர்ந்து குறிவைக்கப்பட்டன.

மேலும், பாலங்கள், பல்கலைக்கழகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள்,மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் ஆகியவையும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளன.
போரால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு
தற்போது 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், போர் நிறுத்ததை ஏற்கும் கோரிக்கைகளில் ஒன்றாக போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் தெரிவித்திருந்தது.
இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையிலும், இழப்பீடு குறித்து ஈரான் விவாதித்துள்ளது.
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் படி, பிப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியது முதல் சுமார் 270 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 லட்சம் கோடி) அளவிற்கு நேரடி மற்றும் மறைமுக சேதம் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி தெரிவித்துள்ளார்.

85% ஏற்றுமதித் திறன் பாதிக்கப்பட்டதால், பெட்ரோலிய வேதிப்பொருள் துறையில் மட்டும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் 30 முதல் 50 பில்லியன் டொலர் வரை உள்ளன.
மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 10%க்கும் மேல் சுருங்கக்கூடும் என்றும், இது 34 முதல் 44 பில்லியன் டொலர் வரையிலான இழப்புகளுக்கு வழிவகுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், இணைய முடக்கம் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 70 முதல் 80 மில்லியன் டொலர் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப இன்னும் 12 ஆண்டுகள் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |