இஸ்ரேல் கொலை முயற்சியில் இருந்து தப்பி தலைமறைவான ஈரானின் முன்னாள் ஜனாதிபதி
இஸ்ரேல் ஈரான் இடையே நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் கொலை முயற்சியில் இருந்து நூலிழையில் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
படுகொலை செய்யப்பட்டதாக
அவரது கார், டொயோட்டா லேண்ட் குரூசர் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது பாதுகாப்பு அதிகாரிகள், இந்த அபாயகரமான தாக்குதலில் இருந்து அவரைக் காப்பாற்றியுள்ளனர்.
காஸாவில் ஹமாஸ் படைகளின் முதன்மையான தளபதிகள் மற்றும் தலைவர்களை இலக்குவைத்து படுகொலை செய்தது போன்று தற்போது ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் ஊடக அமைப்புகளை இஸ்ரேல் இலக்கு வைத்துள்ளது.
அத்துடன் ஈரானின் உயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமெனியை குறிவைக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பரிந்துரைத்துள்ளார். ஆனால் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன், மத்திய தெஹ்ரானில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகளால் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் படுகொலை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களோ ஈரானோ இதுவரை உறுதி செய்யவில்லை. மஹ்மூத் அஹ்மதிநெஜாத் தனது லேண்ட் க்ரூஸரில் முஹர்ரம் விழாவில் கலந்து கொள்வதற்காக சஞ்சானுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சேதம் ஏற்பட்டிருக்கலாம்
இந்த நிலையில் லேண்ட் க்ரூஸரில் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் ஏசி சிஸ்டம் செயலிழப்பை அடுத்து, அவரது தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அவரை காரை மாற்றச் சொன்னார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் இன்னொரு வாகனத்துடன் மோதியுள்ளது.
சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு லேண்ட் க்ரூஸர் பழுதுபார்க்க அனுப்பப்பட்டது. அந்த நேரத்தில் காரில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் ஐந்து நாட்களுக்குப் பிறகு ஈரானிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
தற்போது மஹ்மூத் அஹ்மதிநெஜாத் இஸ்ரேலுக்கு பயந்து தலைமறைவாக உள்ளார் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, ஏப்ரல் மாதத்திலிருந்து அவர் தனது சமூக ஊடகக் கணக்குகளில் எந்தப் பதிவையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |