இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேருக்கு தூக்குத் தண்டனை: ஈரான் அரசு அதிரடி!
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேருக்கு ஈரான் தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளது.
பதற்றம் நீடிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக சமீபத்தில் அறிவித்த போதிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
3 பேருக்கு தூக்குத் தண்டனை
அசர்பைஜான் மாகாணத்தில் உள்ள உர்மியா சிறைச்சாலையில், அசர் ஷொஜாய், எட்ரிஸ் அலி, ரசுல் அகமது ரசுல் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக இவர்கள் குற்றவாளிகள் என ஈரான் நீதித்துறை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த பத்து நாட்களில் இஸ்ரேலுடனான மோதலின் போது உளவு பார்த்ததாக ஏற்கனவே மூன்று பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தூக்கிலிடப்பட்டவர்கள், ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்த உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |