இஸ்ரேலின் மொசாட்-க்கு உளவு வேலை பார்த்த நபர்! மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்
இஸ்ரேல் உளவு நிறுவனத்துடன் தொடர்பில் இருந்ததாக ஈரான் நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள முக்கிய செய்தியின்படி, இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்திற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை ஈரான் இஸ்லாமியக் குடியரசு தூக்கிலிட்டுள்ளது.
மொஹம்மதமின் ஷயெஸ்தே என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டதாக ஈரானின் அரை அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் தெரிவித்துள்ளது.
ஷயெஸ்தே குறித்து மேலும் விவரித்துள்ள தஸ்னிம், அவர் "மொசாட் உடன் தொடர்புடைய ஒரு சைபர் குழுவின் தலைவர்" என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த மரண தண்டனை, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களையும், உளவு குற்றச்சாட்டுகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இரு நாடுகளும் தங்கள் பாதுகாப்பைக் குலைக்கும் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |