போரில் களமிறங்குமா ரஷ்யா? - புதினை சந்திக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர்
அமெரிக்கா ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர், ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார்.
ஈரானை தாக்கிய அமெரிக்கா
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த 10 நாட்களாக மோதல் நடைபெற்று வரும் நிலையில், இன்று அமெரிக்கா ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானில் உள்ள 3 அணுசக்தி தளங்களை தாக்கியழித்துள்ளோம். ஈரான் அமைதிக்கு திரும்பா விட்டால் கூடுதல் இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கப்படும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்குவோம் என ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு, ஐநா சபை மற்றும் சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
புதினை சந்திக்கும் ரஷ்ய அமைச்சர்
ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள ரஷ்யா, இந்தத் தாக்குதல்களை "பொறுப்பற்றது" என்றும் "சர்வதேச சட்டத்தினை மொத்தமாக மீறியுள்ளது" என்றும் தெரிவித்துள்ளது.
"பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயகரமான மோதல் தொடங்கியுள்ளது என்பதுதெளிவாகியுள்ளது" என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யா அதிபர் புதினை நாளை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்த உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
மேலும், புதினுக்கு நெருக்கமான கடும்போக்காளர்கள், அமெரிக்காவின் தலையீட்டிற்கு பின்னர் ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளையில், ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், பாதுகாப்பு கவுன்சிலின் துணைத்தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், ஈரானுக்கு பல உலக நாடுகள் அணு ஆயுதம் வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
2. The enrichment of nuclear material — and, now we can say it outright, the future production of nuclear weapons — will continue.
— Dmitry Medvedev (@MedvedevRussiaE) June 22, 2025
3. A number of countries are ready to directly supply Iran with their own nuclear warheads.
ஏற்கனவே, ரஷ்யா மத்திய கிழக்கில் உள்ள தனது ஆதரவு சக்தியான சிரியாவை இழந்துள்ள நிலையில், ஈரான் பலவீனமடைவது தந்து செல்வாக்கை மட்டுப்படுத்தும் என ரஷ்யா கருதும். இந்த சூழலில் நாளை நடைபெற உள்ள புதினுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |