ஹார்முஸ் நீரிணையை நிர்வகிக்க புதிய அமைப்பு., ஈரான் அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையை நிர்வகிக்க ஈரான் புதிய அமைப்பை அறிவித்துள்ளது.
ஈரான் அரசு, உலகின் முக்கியமான கடல்சந்திகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை நிர்வகிக்க “பெர்ஷியன் கல்ஃப் ஸ்ட்ரெய்ட் ஆத்தாரிட்டி (PGSA)” என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது.
திங்கட்கிழமை (மே 18, 2026) அன்று ஈரானின் உச்ச பாதுகாப்பு குழு இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அமைப்பு, ஹார்முஸ் நீரிணையில் நடைபெறும் போக்குவரத்து நடவடிக்கைகள் குறித்து நேரடி தகவல்கள் மற்றும் விதிமுறைகளை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.
ஈரான் புரட்சிகர காவல்படை கடற்படை இதனை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடங்கிய போருக்கு பிறகு (பிப்ரவரி 28, 2026 முதல்) ஈரான், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை பெருமளவில் தடை செய்துள்ளது.
ஏப்ரல் 8 முதல் இடைக்கால போர்நிறுத்தம் மூலம் சமாதானம் நிலவினாலும், போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பாது என்று ஈரான் தெளிவாக தெரிவித்துள்ளது.
இந்த நீரிணை வழியாக உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து 20 சதவீதம் அளவிற்கு நடைபெறுகிறது. உரம் உள்ளிட்ட பல முக்கிய பொருட்கள் இவ்வழியே ஏற்றுமதி ஆகின்றன. எனவே, ஈரானின் கட்டுப்பாடு உலக சந்தைகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான், சமீபத்தில் இந்த நீரிணை வழியாக செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டண வருவாய் பெறத் தொடங்கியதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய அமைப்பு, ஈரானின் அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகள், குறிப்பாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், இந்த நடவடிக்கையை கவனமாகக் கண்காணித்து வருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |