போருக்கு தயாராகிறதா ஈரான்... 200 ஹெலிகொப்டர்களுடன் தீவிரப்பயிற்சியில் தரைப்படை
இஸ்ரேல் - ஹமாஸ் போர் இறுகி வரும் நிலையில், தற்போது ஈரானின் தரைப்படை இரண்டு நாட்கள் தீவிரப் பயிற்சிக்கு களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீயில் இருந்து தப்ப முடியாது
காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இதுவரை பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை 7,000 கடந்துள்ளது.
@afp
இந்த நிலையில், காஸா மீதான போர் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், அதை மூன்னெடுத்து நடத்தும் அமெரிக்கா அந்த தீயில் இருந்து தப்ப முடியாது என ஈரான் மிரட்டல் விடுத்திருந்தது.
தற்போது தரைப்படையை தயார் படுத்தும் நோக்கில், இரண்டு நாட்கள் தீவிரப் பயிற்சிக்கு களமிறக்கப்பட்டுள்ளது. தரைப்படையுடன் 200 ஹெலிகொப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் காஸா மீது தரைவழித் தாக்குதலை முன்னெடுத்தால், லெபனான் மற்றும் ஈரான் போரில் களமிறங்கும் வாய்ப்புகள் அதிகரித்தே காணப்படுகிறது.
7 மாகாணங்களில் இருந்து
மேலும், ஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக குறிப்பிட்டே, தரைப்படையின் பயிற்சியை முன்னெடுத்துள்ளது. ஈரானின் 7 மாகாணங்களில் இருந்தும் துருப்புகளும் தளவாடங்களும் பயிற்சிக்கு என திரட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலின் தற்போதைய போக்கு கண்மூடித்தனமானது என உணர்ந்து கொண்ட ஜோ பைடன், தற்போது பாலஸ்தீன மக்களின் உயிர் முக்கியம் என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |