ட்ரம்ப் கையொப்பம் மதிப்பற்றது- கடுமையாக தாக்கிய மொஜ்தபா கமேனி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், ஈரான் தனது ஒப்பந்தப் பொறுப்புகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
“அவரது கையொப்பம் மதிப்பற்றது, நம்பகத்தன்மையற்றது” என்று அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர்களின் கொள்கை வன்முறையை சார்ந்தே அமைந்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளை மீறி, இராணுவ தளங்கள் மற்றும் முக்கிய வசதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீர்வழி, தற்போது உலக பொருளாதாரத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மொஜ்தபா கமேனி, “அமெரிக்காவின் கையொப்பம் எந்த மதிப்பும் இல்லை. அவர்கள் ஒப்பந்தங்களை மீறுவது வழக்கமாகிவிட்டது. இதற்கு ஈரான் தக்க பதில் அளிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
இந்த நிலைமை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார சிக்கல்கள் அதிகரிக்கக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |