போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 3 பேர் பலி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தம் அறிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு, இஸ்ரேலின் பெர்ஷெபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
பெர்ஷெபாவில் ஈரான் தாக்குதல்
இஸ்ரேலிய ஊடகங்களின்படி, பெர்ஷெபாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை ஈரான் ஏவுகணை தாக்கியதில், குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்தனர் என மருத்துவ மற்றும் அவசரகால சேவைகளின் தகவல் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்தத்திற்குப் பிறகும் தாக்குதல்கள்
ஈரான் போர் நிறுத்தம் அமலில் இருப்பதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே, இஸ்ரேல் புதிய ஏவுகணை தாக்குதல்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF), ஈரானில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் தாக்குதல் மற்றும் போர் நிறுத்த அறிவிப்பு
ஈரான் வெளியுறவு அமைச்சர் X தளத்தில், ஈரான் தனது தாக்குதலை உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு நிறுத்தியதாகத் தெரிவித்தார். அவரது அறிக்கையில், ஈரான் அதிகாலை 4 மணி வரை தாக்குதலை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசு போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாக செய்திகள் வெளியானாலும், பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வரவில்லை.
இந்த மோதல்கள், கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களைத் தொடர்ந்து அரங்கேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |