ஜோர்டானில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதம்
Iran missiles damage US jets in Jordan: ஜோர்டானில் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதமடைந்துள்ளன.
அமெரிக்க போர் விமானங்கள் சேதம்
ஜோர்டானில் உள்ள Muwaffaq Salti விமான தளம் (Al-Azraq) மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பல அமெரிக்க போர் விமானங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் A-10 Thunderbolt (Warthog) விமானம் கடுமையாக சேதமடைந்தது, அதன் ஒரு சிறகு முற்றிலும் அழிந்துவிட்டது. மேலும், சுமார் எட்டு F-15 போர் விமானங்கள் சிறிய அளவில் சேதங்களை சந்தித்தன. ஆனால் அவை பின்னர் சேவைக்கு திரும்பியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலின் போது, அமெரிக்க படைகள் 30-க்கும் மேற்பட்ட Patriot interceptor missiles-ஐ பயன்படுத்தி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டன.
ஈரான், தண்டனை நடவடிக்கை (punitive operation) என அழைக்கப்படும் இந்த தாக்குதலை, அமெரிக்கா தனது ஐந்து ஈரான் எண்ணெய் கப்பல்களை அழித்ததற்கான பதிலடி எனக் கூறியுள்ளது.
ஜோர்டான் அரசு, “எங்கள் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் 20 ஏவுகணைகளில் 18-ஐ தடுத்து நிறுத்தின. மீதமுள்ள 2 ஏவுகணைகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளில் விழுந்தன. உயிரிழப்புகள் எதுவும் இல்லை” என தெரிவித்ததாவது.
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையேயான நீண்டகால பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. Strait of Hormuz மற்றும் Bab-el-Mandeb போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் இரு தரப்பும் தங்கள் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றன.
சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிப்பதாவது, “இந்த தாக்குதல்கள், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக மாற்றுகின்றன” எனக் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |