அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பே யுரேனியத்தை இடம் மாற்றிய ஈரான் - IAEA அதிர்ச்சித் தகவல்
அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பே ஈரான் அதன் யுரேனியத்தை இடம் மாற்றியதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, ஈரான் 400 கிலோ 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரகசியமாக வேறு இடத்திற்கு நகர்த்தியுள்ளதாக IAEA மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இது 9 முதல் 10 அணுகுண்டுகள் தயாரிக்க போதுமான அளவு என கூறப்படுகிறது.
ஈரானின் Fordow, Natanz மற்றும் Isfahan அணு நிலையங்கள் கடந்த வாரம் அமெரிக்காவின் விமானப்படை தாக்குதலால் சேதமடைந்தன.
எனினும், தாக்குதலுக்கு முன்பு 16 பெரிய டிரக்குகளில் யுரேனியம் மற்றொரு ரகசிய இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
IAEA தலைவர் ரபாயல் கிரோஸி (Rafael Mariano Grossi) , “இந்த யுரேனியம் பாதுகாப்பாக உள்ளதாக ஈரான் பலமுறை தெரிவித்துள்ளது” என்றும், அது தாக்கத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இச்பாஹான் அணு வளாகத்தில் இருந்தது என்றும் New York Times-க்கு உறுதி செய்தார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), “இந்த யுரேனியம் எதிர்கால சமாதான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பேச்சுப்பொருளாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Maxar Technologies செயற்கைக்கோள் படங்கள் மூலமாக மூன்று முக்கிய அணு வளாகங்களும் சிதைந்துள்ளதை உறுதி செய்தன. ஆனால், இஸ்ரேல் ராணுவத்தின் ஆய்வின் படி, அனைத்து வசதிகளும் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது.
இந்நிலையில், ட்ரம்ப் ஈரானுடன் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார். ஆனால் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும், ஈரான் அதை மறுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Iran uranium stockpile 2025, 400 kg uranium Iran news, Iran nuclear bomb-grade material, Fordow Natanz Isfahan attack, Iran moves uranium barrels, US Iran airstrike nuclear, JD Vance Iran uranium, IAEA Rafael Grossi statement, Iran Israel ceasefire 2025, Trump Iran nuclear site bomb