ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவான முன்னாள் இதய அறுவை சிகிச்சை நிபுணர்
சீர்திருத்தவாதியும் முன்னாள் இதய அறுவை சிகிச்சை நிபுணருமான Massoud Pezeshkian என்பவர் ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
பெரும்பான்மையை பெறாத நிலையில்
இவருக்கு எதிராக போட்டியிட்ட தீவிர வலதுசாரி கொள்கைகொண்ட Saeed Jalili என்பவர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். மருத்துவர் Pezeshkian-க்கு ஆதரவாக 53.3 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதை அடுத்து அவர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
Saeed Jalili என்பவருக்கு ஆதரவாக 44.3 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. ஜூன் 28ம் திகதி நடந்த முதற்சுற்று வாக்குப்பதிவில் வேட்பாளர்கள் எவரும் பெரும்பான்மையை பெறாத நிலையில் இரண்டாம் சுற்று முன்னெடுக்கப்பட்டது.
முதல் சுற்றில் வெறும் 40 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. மே மாதம் ஹெலிகொப்டர் விபத்தில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட 8 பேர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தெஹ்ரான் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் டாக்டர் பெஜேஷ்கியானுக்கு ஆதரவாக மக்கள் தெருக்களில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலும் இளைஞர்களே வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் முன்னெடுத்துவரும் கடும்போக்கு கொள்கைகள் அனைத்திற்கும் எதிரானவர் மருத்துவர் Pezeshkian.
மோதல் போக்கையே பின்பற்றும்
மட்டுமின்றி மக்களிடையே ஐக்கியம் மற்றும் ஒற்றுமையை உருவாக்க அவர் உறுதி அளித்த விடயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வெளியான தகவல்களின் அடிப்படையில், முதல் சுற்றில் மக்கள் வாக்களிக்க தயங்கியதாகவும், அதனாலையே 1979 இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் மிகவும் குறைவான வாக்கு சதவிகிதம் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாவது சுற்றில் மக்கள் பெருவாரியாக வாக்களிக்க சென்றுள்ளனர். Saeed Jalili என்பவரின் வெற்றி என்பது,
மேற்கத்திய நாடுகளுடன் ஈரான் மோதல் போக்கையே பின்பற்றும் என்றும் அவர் ஈரானுக்கு அதிக தடைகள் மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு எதையும் கொண்டு வரமாட்டார் என்றும் மக்கள் அஞ்சிய நிலையிலேயே, வெள்ளிக்கிழமை மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க சென்றதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |