ஈரானில் வலுக்கும் ஹிஜாப் போராட்டம்: அரசுக்கு எதிராக துணிந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள்
ஈரானிய அதிகாரிகள் ஆயுதமேந்திய ஈரானிய குர்திஷ் எதிர்ப்பாளர்கள் உட்பட நாட்டில் அமைதியின்மைக்கு அதன் எதிரிகளை குற்றம் சாட்டியுள்ளனர்
பல்வேறு குர்திஷ் நகரங்களில் உள்ள மக்கள் ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இணைந்துள்ளதால் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தற்போது நாட்டின் முக்கிய ஆற்றல் துறையிலும் பரவியுள்ளனர். ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்களின்படி, Abadan and Kangan எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் Bushehr Petrochemical Project தொழிலாளர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் இணைந்துள்ளனர்.
Reuters
ஈரானின் வளைகுடா கடற்கரையில் உள்ள அசாலுயேவில் உள்ள புஷேர் பெட்ரோ கெமிக்கல் ஆலைக்கு செல்லும் சாலையை சில தொழிலாளர்கள் "சர்வாதிகாரிக்கு மரணம்" என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஈரான் எண்ணெய் அமைச்சகம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
ஈரானின் "ஒழுக்கக் காவலர்களால்" கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 16 அன்று பொலிஸ் காவலில் இருந்த Mahsa Amini கொல்லப்பட்டார். இதனால், 1979 புரட்சிக்குப் பின்னர் ஈரானில் மிகபாரிய எதிர்ப்புகளைத் தூண்டியது.
ஈரானில் குர்திஷ் சிறுபான்மையினர் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டு வருவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், அதிகாரிகள் அத்தகைய கூற்றுக்களை மறுக்கின்றனர்.
Today in Iran, workers strike at Bushehr Petrochemical, chanting “Do not fear, do not fear, we are all together.” Striking oil workers played a critical role in the 1979 revolution. pic.twitter.com/gwLmD5jt5q
— Karim Sadjadpour (@ksadjadpour) October 10, 2022
மனித உரிமைகள் குழுவான ஹெங்காவ் திங்களன்று குர்திஷ் நகரங்களான சனந்தாஜ், சாகேஸ் மற்றும் திவாந்தரேஹ் ஆகிய இடங்களில் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் இருப்பதாக அறிவித்தனர். சனிக்கிழமை முதல் நடந்த போராட்டங்களில் குறைந்தது ஐந்து குர்திஷ் குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டதாகவும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அது கூறியது.
அமினியின் பூர்வீக குர்திஸ்தான் மாகாணம் உட்பட பல ஈரானிய நகரங்களில் இருந்து போராட்டக்காரர்களுக்கும் கலகத் தடுப்பு பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் பதிவாகி வருகின்றன. ஈரானிய சமூக ஊடக பதிவுகள் வரும் புதன்கிழமை வெகுஜன போராட்டங்களுக்கு வலியுறுத்தியுள்ளன.
PC:Hawre Khalid/AP
இதுவரை 19 சிறார்கள் உட்பட குறைந்தது 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.