சமரச பேச்சுவார்த்தைக்கு தயார்- அமெரிக்காவிற்கு ஈரான் வைத்துள்ள நிபந்தனை
பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா விவாதிக்க தயாராக இருந்தால், அணு ஒப்பந்தம் குறித்து சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் மஜீத் தக்த்-ரவாஞ்சி, “அணு ஒப்பந்தத்தை அடைய ஈரான் சில சமரசங்களை செய்ய தயாராக உள்ளது. ஆனால், அமெரிக்கா தடைகளை நீக்குவது குறித்து பேசத் தயாராக இருக்க வேண்டும். பந்து இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, “ட்ரம்ப் ஒப்பந்தத்தை விரும்புகிறார், ஆனால் ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது கடினம்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஈரான், 60 சதவீதம் அளவுக்கு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை குறைப்பது குறித்து, “நாங்கள் சமரசம் செய்யத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

ஈரான், தனது 400 கிலோவிற்கும் மேற்பட்ட செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்து “இன்னும் பேச்சுவார்த்தை ஆரம்ப நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
2015 ஒப்பந்தத்தின் போது, ரஷ்யா 11,000 கிலோ யூரேனியத்தை ஏற்றுக்கொண்டது. இப்போது மீண்டும் அதேபோன்ற முன்மொழிவு இருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை திட்டம் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு குறித்து பேச வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால் ஈரான், “இவை எங்கள் பாதுகாப்பு திறன்கள். இதை ஒப்பந்தத்தில் சேர்க்க முடியாது” என்று மறுத்துள்ளது.
மேலும், “நாங்கள் அமைதியான தீர்வை விரும்புகிறோம். ஆனால், அமெரிக்கா உண்மையாக விரும்பினால் மட்டுமே ஒப்பந்தம் சாத்தியம்” என்று மஜித் தக்த்-ரவாஞ்சி கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Iran nuclear deal 2026, Iran US sanctions talks, US Iran nuclear negotiations #IranNuclearDeal #USIranRelations