ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன்
ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா காமெனிக்கு இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
போரில் காயமடைந்த வீரர்
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதையடுத்து, அவரது மகனான மொஜ்தபா காமெனி ஈரானினின் புதிய உச்ச தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

தாக்குதல் ஒன்றில் அவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, ஈரானிய அரசு தொலைக்காட்சியில் போரில் காயமடைந்த வீரர் என்று விவரிக்கப்பட்டார்.
ஆனால், அவர் பொறுப்பேற்றதில் இருந்து பொதுவில் காணப்படவில்லை அல்லது புகைப்படம் எடுக்கப்படவில்லை என்று தற்போது கூறப்படுகிறது.
மோதலில் தொடக்க நாளில் மொஜ்தபாவின் கால்களில் காயங்கள் ஏற்பட்டதாக, நியூயார்க் டைம்ஸில் மேற்கோள் காட்டப்பட்ட இஸ்ரேலிய மற்றும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இஸ்ரேல் மொஜ்தபாவின் இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டதாக கூறுகிறது.
மர்மமாக இல்லாததற்குப் பின்னால்
அறிக்கை ஒன்று அவர் பொதுமக்களின் பார்வையில் இருந்து மர்மமாக இல்லாததற்குப் பின்னால் அவரது காயங்கள் இருக்கலாம் என்று கூறுகிறது.
அதேசமயம் மொஜ்தபா காமெனி இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பார்வையை தவிர்க்க விரும்புகிறார் என்ற கூற்றும் நிலவுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலிய தாக்குதல்களில் அவரது மனைவி மற்றும் தந்தை கொல்லப்பட்ட போதிலும், அவர் எவ்வாறு காயமடைந்தார் என்பது குறித்து விரிவாகக் கூறப்படவில்லை.
இந்த நிலையில், ஈரானிய ஜனாதிபதியின் மகனான யூசெப் பெஷெஸ்கியான் (Yousef Pezeshkian) புதிய உச்ச தலைவர் குறித்து பரவும் செய்திகளை மறுத்துள்ளார்.
அவர், "மொஜ்தபா காமெனியின் காயம் குறித்த செய்திகளை கேள்விப்பட்டேன். அவருடன் தொடர்பில் இருக்கும் என் நண்பர்களிடம் கேட்டபோது, அவர் நலமுடன் இருப்பதாகவும் எந்த பிரச்சனைகளும் இல்லை என்றும் கூறினர்" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |