பதற்றமான சூழலில் பாகிஸ்தான் செல்லும் ஈரான் ஜனாதிபதி: முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு
இஸ்ரேல் ஈரான் மோதல்களால் உலகமே மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்னும் பதற்றத்தில் இருக்கும் நிலையில், ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் செல்லும் ஈரான் ஜனாதிபதி
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவும் நிலையில், ஈரான் ஜனாதிபதியான Ebrahim Raisi மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.
இன்று, அதாவது, ஏப்ரல் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை அவரும் அவரது மனைவியும், வெளியுறவு அமைச்சர் முதலான சில அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பாகிஸ்தானில் செலவிட உள்ளனர்.
Screengrab via Aaj News
இஸ்ரேலுடன் மோதல்கள் நிகழ்ந்துவரும் நிலையில், ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தான் சென்றுள்ள விடயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
விடயம் என்னவென்றால், ஜனவரியில், ஈரான் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி வான்வழித் தக்குதல் நடத்த, உடனே பாகிஸ்தான் டோன்கள் மற்றும் ராக்கெட்கள் மூலம் பதில் தாக்குதல் நடத்த, இரு நாடுகள் உறவில் பாதிப்பு ஏற்பட்டது.
சீக்கிரமே இருநாடுகளும் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக்கொண்டன. தற்போது ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |