ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை வருகை - எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்ரேல்
கடந்த மாதம் இறுதி வாரத்தில் ஈரானிய பிரதமர் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இலங்கை வருகையை குறித்து இஸ்ரேலிய தூதுவர் நாபீர் கிலன் (Naor Gilon) எதிர்ப்பு தெரிவித்து ஊடகங்களில் பேசியுள்ளார்.
எதிர்த்து நிற்கும் இஸ்ரேல்
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை கடந்த வாரம் மேற்கொண்டு இருந்தார்.
வருகையின் போது இரு நாட்டு ஜனாதிபதிகளும் கலந்துரையாடினார்கள். இது குறித்து இஸ்ரேலிய தூதுவர் நாபீர் கிலன் (Naor Gilon) பேசிய போது, இலங்கையின் இந்த செயற்பாடு அதிருப்தி அளிப்பதாக இருக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் இலங்க தன்னை ஓர் அணிசேரா நாடு என அடையாளப்படுத்திக் கொள்கிறது எனவும் கூறியுள்ளார். பல நாடுகள் இதில் இருந்து விடுப்பட்டு வருகிறது. இஸ்ரேல் மீது 350இற்கு மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே இவர் இலங்கைக்கு சென்றுள்ளார். இதை தனிப்பட்ட ரீதியாக எதிர்க்கிறோம்.
மேலும் காசாவில் நிகழும் போரானது பாலஸ்தீன மக்களுக்கு எதிரானதாக இல்லை. இது ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக இஸ்ரேல் படையினர் போரில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் சிவிலியன் இழப்புக்களை வரையறுத்துக் கொள்வதற்கான சகல முயற்சிகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |