எகிறிய பலி எண்ணிக்கை... இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைக்கும் ஈரான்
போராட்டங்களை நசுக்க அதிகாரிகள் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஈரான் முழுவதும் 80 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்
ஈரானில் கடந்த 11 நாட்களாக நீடிக்கும் பொதுமக்கள் போராட்டத்தில், பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அப்பாவி பொதுமக்கள் மீதான வன்முறை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும் நிலையில், 11 நாட்களில் மட்டும் பலி எண்ணிக்கை 76 என தெரியவந்துள்ளது.
நார்வே நாட்டினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பானது வெளியிட்டுள்ள தகவலில், போராட்டங்களை நசுக்க அதிகாரிகள் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
@reuters
ஈரானிய ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில் பாதுகாப்பு படையினர் பலர் உட்பட 41 பேர்கள் இதுவரை பலியாகியுள்ளதாகவும், ஆனால் இதற்கு போராட்டக்காரர்களே முழு பொறுப்பு எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுவரை 20 பத்திரிகையாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதாக கைதாகியுள்ளனர். செப்டம்பர் 17 அன்று மஹ்சா அமினியின் இறுதிச் சடங்கிலிருந்து ஈரான் முழுவதும் 80 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளன.
வடமேற்கு நகரமான சாகேஸைச் சேர்ந்த 22 வயதான குர்திஷ் பெண் ஒருவர் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், செப்டம்பர் 13 அன்று, பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் அல்லது முக்காடு போட்டு மறைக்க வேண்டும் என்ற கடுமையான சட்டத்தை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஒழுக்கக் காவல் துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
@getty
இந்த நிலையில், விசாரணைக்கு பின்னர் கோமா நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட, 3 நாடக்ளுக்கு பின்னர் மரணமடைந்தார்.
ஆனால், மாரடைப்பு காரணமாகவே குறித்த இளம்பெண் மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.