இஸ்ரேல் தாக்குதல் தொடர... போர் நிறுத்தத்திற்கு தயாரில்லை: ஈரான் திட்டவட்டம்
இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் ஓமானிடம் ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கெஞ்சும் நிலைக்கு
இரண்டு எதிரிகளும் புதிய தாக்குதல்களைத் தொடங்கி, தீவிர மோதலுக்கான அச்சங்களை எழுப்பியுள்ள நிலையிலேயே போர் நிறுத்தம் தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஈரானின் உக்கிர தாக்குதலை எதிர்பாராத இஸ்ரேல் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு ஈரான் தனது முழுமையான பதிலை முடித்த பின்னரே தீவிர பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம் என்று ஈரானிய தரப்பு கத்தார் மற்றும் ஓமானி மத்தியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியிருப்பதால், தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை ஈரான் மீது அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது, இது ஈரானின் இராணுவ அமைப்பின் உயர் அதிகாரிகளில் சிலரை அழித்தது மற்றும் அதன் அணுசக்தி தளங்களை சேதப்படுத்தியது.
இஸ்ரேல் மக்கள்
அத்துடன் வரும் நாட்களில் தாக்குதல் உக்கிரமடையும் என்றும் இஸ்ரேல் கொந்தளித்தது. ஆனால் இஸ்ரேலுக்கு நரகத்தின் வாசலை திறந்து காட்டுவோம் என சபதமெடுத்த ஈரான், தக்க பதிலடி அளித்து வருகிறது.
இதனால் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்ரேல் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு பலத்த சேதங்களை ஈரான் அளித்து வருவதால், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் முறையிட்டு வருகிறது.
இந்த நிலையில், போர் நிறுத்தம் வேண்டும் என ஈரான் கோரியுள்ளதாகவும் தகவல் ஒன்று கசிந்துள்ளது. இதை ஈரான் வெளிவிவகார அமைச்சகமும், கத்தார் மற்றும் ஓமானி அதிகாரிகளும் உறுதி செய்யவில்லை.
வெளிவரும் தகவலின் அடிப்படையில் இஸ்ரேல் தரப்பு கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |