ஜோர்டானில் அமெரிக்க போர் விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரயில் சேவைகள் பாதிப்பு
அமெரிக்க போர் விமானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் அறிவித்துள்ளனர்.
அமெரிக்க போர் விமானம் மீது தாக்குதல்
ஜோர்டான் நாட்டில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர் விமானங்களை குறிவைத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர்(IRGC) தாக்குதல் நடத்தி இருப்பதாக ஈரான் அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரான் தரப்பில் இருந்து வெளியான இந்த தகவலானது, ஜோர்டான் நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 3 ஈரானிய ஏவுகணைகளை ஜோர்டான் நாட்டு படைகள் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்து இருந்த நிலையில். ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெளியான இரண்டு முரண்பாடான தகவல்கள் எதையும் முறையாக உறுதிப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் சேவை பாதிப்பு
அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல்களால் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் ரயில்வே உள்கட்டமைப்புகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பண்டர் அப்பாஸ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகள் ரயிலின் சேவைகளை ஈரான் அரசு வெகுவாக குறைத்துள்ளது.
மேலும் பயணிகள் பேருந்துகள் மூலம் ஃபின் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து தங்களுடைய பயணங்களை மேற்கொள்ளுமாறும் ஹோர்மோஸ்கான் ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |