போர் இழப்புக்கு ஈடு செய்யப்பட வேண்டும்... அமெரிக்காவிடம் மீண்டும் நிபந்தனை வைக்கும் ஈரான்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.
கப்பல்களுக்கு வரி
இழப்பீட்டு உட்பட முக்கிய நிபந்தனைகளுடன் ஈரான் தொடர்ந்து பிடிவாதமாக இருந்துவரும் நிலையில், பிராந்திய சக்திகள் போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுப்பதற்குத் தங்கள் நிலப்பகுதிகள் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டி, ஐந்து பிராந்திய நாடுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள ஈரானின் தூதர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மட்டுமின்றி, சேதங்களுக்கான இழப்பீட்டை ஹார்முஸ் நீரிணை நெறிமுறை மூலம் வழங்குவதற்கான யோசனையையும் ஈரான் முன்வைத்துள்ளது; இந்த நெறிமுறையின்படி, அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு வரி விதிக்கப்படும்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் சுமார் 270 பில்லியன் டொலர் மதிப்பிலான நேரடி மற்றும் மறைமுக சேதங்களைச் சந்தித்துள்ளது என்று ஒரு ஆரம்ப மதிப்பீடு சுட்டிக்காட்டுகிறது என, ஈரான் அரசாங்க அதிகாரி ஃபாத்திமா மொஹஜெரானி தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, சேதங்களின் விவரம் போன்ற மேலதிக தகவல்களை அவர் வழங்கவில்லை, ஆனால் கடந்த வாரம் பாகிஸ்தானில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் இழப்பீடு வழங்கும் விவகாரம் விவாதிக்கப்பட்டதாகவும், அமெரிக்கா மற்றும் மத்தியஸ்தர்களுடன் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இது எழுப்பப்படும் என்றும் கூறியுள்ளார்.

இராணுவ வளாகங்கள் மட்டுமின்றி, எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள், பெட்ரோலிய வேதிப்பொருள் நிறுவனங்கள், எஃகு ஆலைகள், அலுமினியத் தொழிற்சாலைகள் ஆகியவையும் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட விரிவான சேதத்தை அரசாங்கம் இன்னும் மதிப்பீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
பாலங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே, பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள், பல மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவையும் நேரடியாகத் தாக்கப்பட்டன.
அதேவேளையில், பெருமளவிலான மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகளும் சேதமடைந்தன அல்லது முற்றிலுமாக அழிந்தன.
இந்த நிலையில், அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களால் பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்தாலோ அல்லது அழிக்கப்பட்டாலோ, அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை என்ற அளவிற்கு தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடி இருப்பதாக மொஹஜெரானி இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்தார்.

மேலும், 40 நாட்கள் நீடித்த மோதலால் பயணிகள் விமான சேவை நிறுவனத்திற்கு 190 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, தெஹ்ரான், தப்ரிஸ், உர்மியா மற்றும் கோர்ரமாபாத் உள்ளிட்ட நாட்டின் பல சர்வதேச விமான நிலையங்களின் ஓடுபாதைகள், கட்டுப்பாட்டுக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட எண்ணற்ற தாக்குதல்களுக்குப் பிறகு, அவை கணிசமாக சேதமடைந்தன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |