வெடிக்கக் காத்திருக்கும் அடுத்த போர்: ஈரானின் பயங்கர பழிக்குப்பழி திட்டம்
இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கிடையிலான மோதல் மூன்றாம் உலகப்போராக வெடிக்குமா என்ற அச்சம் உலக நாடுகளுக்கு உருவாகியுள்ள நிலையில், அடுத்து ஈரான் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து நிபுணர்கள் பலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
இஸ்ரேலின் ரகசிய திட்டம்?
ஏப்ரல் 13ஆம் திகதி இரவில், ஈரான், இஸ்ரேல் மீது 300க்கும் அதிகமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நிகழ்த்தியது. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா உதவியுடன் இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது.
அதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை, ஈரானிலுள்ள Isfahan நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த தாக்குதல்களில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லையென்றாலும், அதில் ஒரு முக்கியத்துவம் உள்ளது.
அதாவது, Isfahanஇல் அணு மின் நிலையங்கள் உள்ளனவாம். ஆக, ஈரானின் அணு மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் நடத்திய ஒரு ஒத்திகையாக அது இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஈரானின் பயங்கர பழிக்குப்பழி திட்டம்
ஆனால், அப்படி இஸ்ரேல் ஈரானுடைய அணு மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துமானால், அது பெரிய போருக்கு வழிவகுக்கும், அது அணு ஆயுத போராகக் கூட வெடிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
அதே நேரத்தில், ஈரான் நேரடியாக தாக்குதலில் ஈடுபடாமல், தனது ஆதரவாளர்களான ஆயுதக்குழுக்கள் மூலம் பயங்கர தாக்குதலில் ஈடுபடலாம் என்கிறார்கள் அவர்கள்.
அதாவது, ஈரானுக்கு, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதிக்கள் மற்றும் ஈராக்கிலுள்ள சில குழுக்கள் என பல ஆயுதக் குழுக்களின் ஆதரவு உள்ளது.
ஆகவே,இந்த ஆதரவுக்குழுக்கள் இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நிகழ்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு பெரிய போர் வெடித்து, அது மூன்றாம் உலகப்போராக மாறவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
காசாவில் இரண்டாவது போர்
அதேபோல, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு, காசாவில் இஸ்ரேலுடன் இரண்டாவது பயங்கர மோதலுக்குத் தயாராக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆக, அடுத்து இஸ்ரேல் எடுக்கும் முடிவைப் பொறுத்தே என்ன நடக்கும் என்பது உலகுக்கே தெரியவரும். இப்போதே கச்சா எண்ணெய் விலையும், தங்கம் விலையும் உயர்ந்துவருவதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், இஸ்ரேல் எடுக்கும் முடிவு ஈரானை மட்டுமல்ல, உலக நாடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
பொதுவாக, தான் தாக்குதல் நடத்தியது குறித்து இஸ்ரேல் கருத்து தெரிவிப்பதில்லை என கூறப்படும் நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்பதைத் தவிர மற்றவர்களுக்கு வேறு வழியில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |