பற்றியெரியும் எண்ணெய் கப்பல்கள்... உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த புதிய எச்சரிக்கை
எண்ணெய் விலை பீப்பாய்க்கு 200 டொலரை எட்டுவதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று ஈரானின் இராணுவத் தலைமை புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு முழுவதும்
ஹார்முஸ் நீரிணை அருகே மேலும் மூன்று எண்ணெய் கப்பல்கள் ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கான நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுளது.

புதன்கிழமை இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் புதிய தாக்குதலை நடத்தியது, இது ஈரானால் இன்னும் எதிர்த்துப் போராடவும் எரிசக்தி விநியோகத்தை சீர்குலைக்கவும் முடியும் என்பதை அந்த நாடு மீண்டும் நிரூபித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேலுடன் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரைவான வழியைக் கண்டுபிடிப்பார் என்று முதலீட்டாளர்கள் நம்பத் தொடங்கியதை அடுத்து,
இந்த வார தொடக்கத்தில் அதிகரித்த எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன, பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. ஆனால் இதுவரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை, அல்லது ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
இந்த நிலையிலேயே ஈரானின் இராணுவ கட்டளையின் செய்தித் தொடர்பாளர் Ebrahim Zolfaqari புதிய அச்சுறுத்தலை விடுத்துள்ளார். எண்ணெய் விலை பீப்பாய்க்கு 200 டொலரை எட்டுவதற்கு உலகம் தயாராக வேண்டும்,

ஈரான் பதிலடி கொடுக்கும்
ஏனென்றால் எண்ணெய் விலை நீங்கள் நிலைகுலைய வைத்த பிராந்திய பாதுகாப்பைப் பொறுத்தது என்றார். இதனிடையே, தெஹ்ரானில் உள்ள பழமையான ஒரு வங்கியின் அலுவலகங்கள் இரவோரு இரவாக தாக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் வணிகம் செய்யும் வங்கிகள் மீது தாக்குதல்கள் மூலம் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும் சோல்ஃபாகரி எச்சரித்துள்ளார்.
மட்டுமின்றி, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள வங்கிகளில் இருந்து மக்கள் 1,000 மீற்றர் தொலைவுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, போரால் ஈரான் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்பதை இஸ்ரேலிய தலைவர்கள் தற்போது தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டுள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது.
மேலும், போரை தாங்கல் வென்று விட்டதாக அமெரிக்கா கூறி வந்தாலும், தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |