ட்ரம்ப் அந்த முடிவுக்கு வந்தால்... இன்னொரு முதன்மையான நீரிணையும் ஈரான் முடக்கும்
ஈரானில் இராணுவத்தைக் களமிறக்கும் முடிவுக்கு டொனால்ட் ட்ரம்ப் வருவார் என்றால், ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இன்னொரு முதன்மையான நீரிணையும் முடக்கப்படும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
ஐரோப்பா - ஆசியா
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்து ஹார்முஸ் நீரிணை முடங்கியுள்ளது. ஈரானால் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் வதந்திகள் பரப்பப்படும் ஹார்முஸ் நீரிணையில், தற்போதும் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளின் கப்பல்கள் கடக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஈரான் இராணுவம் தற்போது Bab al-Mandab நீரிணையை முடக்க இருப்பதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளது. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே மிக முக்கியமான கடல் பாதையான இது முடக்கப்பட்டால், மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பது உறுதி என்றே கூறுகின்றனர்.
இந்த நீரிணை உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தில் பத்தில் ஒரு பங்கிற்கும் மேலான பங்களிப்பை வழங்குகிறது, மேலும் இது சர்வதேச வர்த்தகத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்.
Bab al-Mandab நீரிணை, சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் செங்கடலின் முகத்துவாரத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.
ஹவுதிகளின் ஏவுகணைகள்
நீரிணை நெடுகிலும் யேமன் கடற்கரையோரம், ஹவுதிகள் முகாமிட்டுள்ளதால், எண்ணெய் கப்பல்கள் அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஈரானிய ராணுவ வட்டாரம் தெரிவிக்கையில்,

அமெரிக்கர்கள் முட்டாள்தனமான செயல்களால் ஹார்முஸ் நீரிணைக்கு ஒரு தீர்வைக் காண நினைத்தால், அவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்கும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கும் மேலும் ஒரு நீரிணையைச் சேர்த்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இஸ்ரேல் கப்பல்களை ஹவுதிகளின் ஏவுகணைகள் அலறவிட்டன. மார்ச் மாதம் வரையில் 40 கப்பல்கள் அச்சுறுத்தலுக்கு இலக்கானதுடன், 2000 கப்பல்கள் செங்கடலிலிருந்து திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் தற்போது கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ட்ரம்ப் நிர்வாகம், ஈரானில் இராணுவத்தைக் களமிறக்க திட்டமிட்டு வருகிறது. ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்றுவதே இலக்காக பார்க்கப்படுகிறது. 2,500-க்கும் மேற்பட்ட அமெரிக்கக் கடற்படையினர் போர் மண்டலத்தை நெருங்கி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |