ஹிஜாப் அணியாத பெண்களை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் ஈரான் அரசு
ஹிஜாப் அணியாத பெண்களை கண்டுப்பிடிக்க ஈரான் அரசு ட்ரோன் கேமராக்களை பயன்படுத்திக்கிறது.
ஹிஜாப் கட்டாயம்
ஈரானில் பெண்கள் தலையை மறைத்து ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற சட்டம் உள்ளது. இதனை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த உடைக்கட்டுப்பாட்டு விதியை கடைப்பிடிக்காத பெண்களை, ஈரான் அரசு ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பதாக ஐநா அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
Nazer செயலி
உடைக்கட்டுப்பாட்டை மீறும் பெண்கள் குறித்து புகாரளிக்க Nazer எனும் செயலியை ஈரான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், வாகனங்களில் செல்லும் பெண்கள் உடைக்கட்டுப்பாட்டை மீறினால், அந்த வாகன எண், இடம், நேரத்துடன் பொதுமக்கள் புகார் அளிக்க முடியும். அதன் பின் அந்த தகவல் காவல்துறைக்கு அனுப்பப்படும்.
அதன் பின்னர் தானியங்கி முறையில், வாகன உரிமையாளருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும். விதிமீறல் தொடர்ந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
ட்ரோன் கேமரா
மேலும், தெஹ்ரான் மற்றும் தெற்கு பகுதிகளில் வான் வெளியில் ட்ரோன்கள் மூலம் பெண்களின் ஆடைக்கட்டுப்பாட்டை கண்காணிக்கிறது.
அமீர்கபீர் பல்கலைக்கழகத்தில், ஹிஜாப் அணியாதவர்களைக் கண்டறிய அதிகாரிகள் முக அங்கீகார கேமராக்கள் மற்றும் மென்பொருளை நிறுவியுள்ளனர்.
மேலும், ஈரானின் முக்கிய சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் இதற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |