ஈரான் போரால் மேலும் பணக்கார நாடாக மாறும் சவுதி- ஆனாலும் கவலை அதிகரிப்பு
ஈரான் போரால் லாபம் அதிகரிக்கும் என்றாலும், அதிக கவலை கொண்டுள்ளது சவுதி அரேபியா. அதற்கான காரணத்தை பாப்போம்.
ஈரான் போரின் தாக்கம் உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக இருந்தாலும், விலை அதிகரிப்பால் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை.
பிப்ரவரி 28 முதல் தொடங்கிய போரின் காரணமாக எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து, தற்போது ஒரு பீப்பாய் 119 அமெரிக்க டொலர் வரை சென்றுள்ளது.

கத்தார், சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையம் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் நடந்த தாக்குதல்கள் விலையை மேலும் தூண்டியுள்ளன.
ஏப்ரல் மாத இறுதிக்குள் விலை 180 டொலர் வரை செல்லும் அபாயம் இருப்பதாக சவுதி அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
விலை அதிகரிப்பால் உலகளாவிய மந்தநிலை ஏற்படும், நீண்டகால தேவை குறையும், மேலும் சவுதி அரேபியா "போரின் மூலம் லாபம் அடைந்த நாடு" என்ற பெயரை பெறும் அபாயம் உள்ளது.
சவுதி அரேபியா, நிலையான சந்தையை விரும்புகிறது. அதிக விலை உயர்வு அவர்களுக்கு தற்காலிக லாபம் தந்தாலும், நீண்டகாலத்தில் உலக சந்தையை பாதிக்கும் என்பதால் அவர்கள் கவலையுடன் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் பெட்ரோல் விலை 3.88 டொலர். டீசல் 5.10 டொலர் வரை உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. இந்தியாவிற்கு இது மிகப்பெரிய சவாலாகும்.
இந்தியா தனது எண்ணெய் தேவையின் 89 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. விலை 150 முதல் 180 டொலர் வரை சென்றால் இந்தியாவின் பொருளாதாரம், ரூபாய் மதிப்பு மற்றும் பணவீக்கம் கடுமையாக பாதிக்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Iran war oil prices, Saudi Arabia oil crisis, Global recession oil impact #IranWar #SaudiArabia #OilPrices