எங்களை சீண்டினால் இது தான் கதி...! பிரித்தானியா, அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை
நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான எந்தவித அச்சுறுத்தலுக்கும் உடனாடியாக பதிலடி கொடுப்போம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஓமான் கடலில் இஸ்ரேலில் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் கப்பல் குழுவினரில் இரண்டு பேர் (பிரித்தானியர், ருமேனியா நாட்டவர்) கொல்லப்பட்டனர்.
இந்த டிரோன் தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
எனினும், இந்த தாக்குலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
ஆனால், ஈரான் தான் செய்த செயலுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
இதனைதொடர்ந்து திங்கட்கிழமை ஈரானிய தூதருக்கு பிரித்தானியா சம்மன் அனுப்பியது. பின், தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் பொறுப்பாளர் மற்றும் ருமேனியாவின் உயர் தூதருக்கு ஈரான் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை பாதுகாக்க எந்த தயக்கமும் காட்டது, எந்தவித அச்சுறுத்தலுக்கும் உடனடியாக மற்றும் வீரியமாக பதிலடி கொடுக்கும் என வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் Saeed Khatibzadeh எச்சரிக்கை விடுத்துள்ளார்.