வெளிநாட்டில் கைதாகி மரணமடைந்த இளம்பெண்... தூதரகம் முற்றுகை: போர்க்களமான லண்டன் நகரம்
வெஸ்ட்மின்ஸ்டரில் அமைந்துள்ள ஈரானிய தூதரகத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.
போராட்டம் நடந்த பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரிவு 35 உத்தரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
லண்டனில் ஈரானிய தூதரகத்தை முற்றுக்கையிட்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் பொலிஸ் அதிகாரிகள் காயம்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் ஈரானிய தூதரகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
@PA
ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், நூற்றுக்கணக்கானோர் வெஸ்ட்மின்ஸ்டரில் அமைந்துள்ள ஈரானிய தூதரகத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.
இதில் போத்தல்கள் உள்ளிட்டவையை வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அதிகாரிகள் பலர் காயம்பட்டதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி இதுவரை 12 பேர் கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போராட்டம் நடந்த பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரிவு 35 உத்தரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
@getty
மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் துவங்கப்படும் எனவும், கண்டிப்பாக அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தூதரக முற்றுகையானது ஈரானில் தொடரும் போராட்டங்களின் எதிரொலி என்றே தெரியவந்துள்ளது. ஈரானில் ஹிஜாப் தொடர்பாக அமுலில் இருக்கும் விதிகளை பின்பற்றாததை குறிப்பிட்டு 22 வயது மஹ்ஸா அமினி கைது செய்யப்பட்டார்.
ஆனால், பொலிசார் மேற்கொண்ட கடும் விசாரணைக்கு பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்று, பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இச்சம்பவம் ஈரான் மொத்தமும் கொந்தளிக்க செய்ததுடன்,
@REX
பெண்கள் தங்கள் ஹிஜாப் உடைகளை பொதுவெளியில் வைத்து கொளுத்தியதுடன், தலைமுடியை துண்டித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.