மகனின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய தாயார்: சிறையில் தள்ளிய அரசாங்கம்
ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் விவகாரத்தில் நீதி கேட்டு போராடிய தாயாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு எதிரான பிரச்சாரம்
ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது 20 வயதான Mohammad Javad Zahedi சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் அவரது தாயார் Mahsa Yazdani மீது தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
@twitter
இறை நிந்தனை, கலவரத்தைத் தூண்டுதல், உச்ச தலைவரை அவமதித்தல் மற்றும் ஆட்சிக்கு எதிரான பிரச்சாரம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தற்போது Mahsa Yazdani-க்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் ஐந்தாண்டுகள் அவர் பிணையில் வெளிவர முடியாது எனவும் கூறப்படுகிறது. ஈரானை மொத்தமாக உலுக்கிய மஹ்ஸா அமினி மரணத்தை அடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது கொல்லப்பட்டவர்களில் Mohammad Javad Zahedi என்பவரும் ஒருவர்.
மேலும் Mohammad Javad Zahedi-ன் குண்டு துளைத்த சடலத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அவரது குடும்பத்தினரின் தகவலின்படி, நெருங்கிய தூரத்தில் இருந்து ஜாஹேதி பல முறை சுடப்பட்டுள்ளார் எனவும்,
13 ஆண்டுகள் சிறை
அவரது முதுகு மற்றும் தலையில் பெல்லட் குண்டு காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி உடற்கூறு ஆய்வில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், 20 வயதேயான மகனின் மரணத்தை அடுத்து Yazdani அரசாங்கத்திற்கு எதிராக கடும் விமர்சனம் முன்வைத்திருந்தார்.
தமது மகனின் மரணத்திற்கும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் கொல்லப்பட்டவர்களுக்கும் நீதி வேண்டும் என அவர் முழக்கமிட்டார்.
இதனையடுத்து ஆகஸ்டு 22ம் திகதி Yazdani கைது செய்யப்பட்டதுடன், அவர் மீதான விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது. தற்போது அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |