மத்திய கிழக்கில் இனி அவர்களுக்கு அனுமதி இல்லை... எமிரேட்ஸ் விமான நிறுவனம் அதிரடி
துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம், ஈரானியக் குடிமக்கள் இனி ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையவோ அல்லது அங்கு வழித்தங்கல் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் நுழைய
குறித்த அறிவிப்பை, அந்த நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இன்னொரு விமான சேவை நிறுவனமான Flydubai தங்களின் இணையதளத்தில்,

ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசா வைத்திருக்கும் ஈரானிய நாட்டினருக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் நாட்டிற்குள் நுழையவும், நாட்டைக் கடந்து செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளனர்.
ஆனால், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் இதுவரை இந்த விவகாரத்தில் விளக்கமளிக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது. ஈரான் போர் தொடங்கியதில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வந்துள்ளது.
ஈரானின் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலுக்கு பதிலடி அளிப்பது போன்று, ஐக்கிய அமீரகத்தின் மீதும் ஈரான் பதிலடி கொடுத்து வந்தது.

ஈரானின் கோரிக்கை
ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தங்களை அமெரிக்கா பாதுகாக்கும் என்றே ஐக்கிய அமீரகம் நம்பியிருந்தது. ஆனால் ஈரான் போர் வெடித்த போது, ஐக்கிய அமீரகத்தைப் பாதுகாக்க அமெரிக்காவால் முடியாமல் போனது.
அமெரிக்காவின் பாதுகாப்பு கட்டமைப்புகள் அனைத்தையும் ஈரான் ஏவுகணைகளாலும் ட்ரோன்களாலும் தாக்கி அழித்தது. அமெரிக்காவை மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.

மட்டுமின்றி, ஈரான் மீதான தாக்குதலைக் கைவிட வேண்டாம் என்று சவுதி அரேபியா அழுத்தமளித்தும் வருகிறது. தற்போது ஈரான் போரில் இருந்து அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தாக்குதலைத் தொடர முடிவு செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இருப்பினும், ஈரான் தற்போது தங்களுக்கு அச்சுறுத்தல் அல்ல என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |