7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வரும் ஈரான் கச்சா எண்ணெய் கப்பல்
7 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் கப்பல் வருகிறது.
Ping Shun எனப்படும் எண்ணெய் கப்பல், சுமார் 6 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு, குஜராத் மாநிலம் வடிநார் துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது.
இந்த எண்ணெய் கப்பல், மார்ச் 4 அன்று ஈரானின் Kharg Island terminal-இல் எண்ணெயை ஏற்றியது. ஏப்ரல் 4 அன்று இந்தியாவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மார்ச் 21 அன்று வழங்கிய 30 நாள் தற்காலிக தடை விலக்கு காரணமாக இது சாத்தியமானது.

இந்த விலக்கு, ஏற்கனவே எண்ணெய் கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரான் எண்ணெயை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கிறது. இதன் மூலம் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2019-இல் அமெரிக்கா ஈரான் அணு ஒப்பந்தத்திலிருந்து விலகியபின், இந்தியா ஈரான் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது. இப்போது மீண்டும் இறக்குமதியை தொடங்குவதன் மூலம், இந்திய சுத்திகரிப்பு அலைகளுக்கு விநியோக அழுத்தத்தை குறைக்கும் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
ஆனால், பணம் செலுத்தும் முறைகள் குறித்து இன்னும் தெளிவில்லை. SWIFT வங்கி அமைப்பில் இருந்து ஈரான் நீக்கப்பட்டதால், முன்பு பயன்படுத்திய ரூபாய் அடிப்படையிலான பரிவர்த்தனை முறையை மீண்டும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
ஈரான் எண்ணெய், குறைந்த விலை மற்றும் ஆசிய ரிபைனரிகளுக்கு ஏற்ற தன்மை காரணமாக இந்தியாவிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது, இந்தியா-ஈரான் எண்ணெய் வர்த்தகத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முக்கிய நகர்வாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |