இலங்கையை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) சற்றுமுன்னர் இலங்கையை வந்துடைந்துள்ளார்.
இலங்கையை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
சற்றுமுன்னர் இலங்கை மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவர் தற்போது உமா ஓயா பல்நோக்கு திட்டத்தில் உள்ள நீர்மின் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரைசி கொழும்புக்கு சென்று, ஐந்து இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளார்.
இந்நிகழ்வில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு தலைவர்களும் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இவர் பாகிஸ்தானுக்கான மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |