சிறையில் இருக்கும் பெண்ணிற்கு நோபல் பரிசு அறிவிப்பு
நோபல் பரிசு பட்டியலில் மிகவும் முக்கியமாக கருதப்படும் நோபல் சமாதான பரிசு ஈரானில் சிறையிடப்பட்ட பெண் சமூக செயல்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு வழங்கப்பட்டுள்ளது
சிறையில் இருக்கும் பெண்ணிற்கு நோபல் பரிசு
120 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைகொண்ட நோபல் சமாதான பரிசு பட்டியலின் வரலாற்றில் அந்த பரிசை பெற்ற 19வது பெண்ணாக நர்கிஸ் முகம்மதி பதிவாகியுள்ளார்.
ஈரானில் பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் - சுதந்திரத்துக்காவும் போராடியமைக்கான நர்கிஸ் முகம்மதிக்கு இந்த முறை சமாதான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவுக்குழு அறிவித்துள்ளது
நீண்ட காலமாக பெண்களின் உரிமைகளுக்காகவும் மரண தண்டனையை ஒழிப்பதற்காகவும் பிரச்சாரம் செய்துள்ள நர்கிஸ்முகமதி 30 ஆண்டுகால தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவரை கணவர் மற்றும் குழந்தைகள் பார்வையிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் முகமதி கலந்து கொள்ளும்வகையில் ஈரான் அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் என நம்புவதாக நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த இரண்டாம் திகதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை மருத்துவம், இயற்பியல்,வேதியியல் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
மருத்துவத்துக்கான பரிசு கொரோனா தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் கண்டுபிடிப்புக்காக கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |