எதிரி நாடு அல்ல... புதிய உறவை ஏற்படுத்த விருப்பம்: ஜோ பைடனுடன் கைகுலுக்க தயாராகும் நாடு
அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்த விரும்புவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜாவத் சாரீஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பேசிய அமைச்சர் ஜாவத் சாரீஃப், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பின் தோல்வியுற்ற நிர்வாகக் கொள்கைகளைப் பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விரும்பவில்லை என்பதே புதிய நம்பிக்கை அளிக்கிறது.
அவர்கள் எதிரி நாடு அல்ல, இதனால் அமெரிக்காவுக்கு மேலும் புதிய வாய்ப்புகள் அமையலாம். புதிய நிர்வாகத்துடன் நாங்கள் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜாவத் சாரீஃப்.
சில நாட்களுக்கு முன்னர், அனைத்து விதிமுறைக் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால்,
அணு ஆயுத ஒப்பத்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதில் ஜோ பைடன் தெளிவாக இருக்கிறார் என்றும்,
ஈரானுடனான எங்களது உறவை மேம்படுத்தும் வாய்ப்பாக இதனைக் கருதுவோம் என்றும் ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.