300 பேர் கொல்லப்பட்ட ஈராக் வெடிகுண்டு சம்பவம்: 3 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
300 பேர் வரை கொல்லப்பட்ட 2016ம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு ஈராக் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
2016ம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல்
2016ம் ஆண்டு ஜூலை 3ம் திகதி முஸ்லிம்களின் ஈத் அல்-பித்ர் பண்டிகைக்கு முன்னதாக மக்கள் நிறைந்து காணப்பட்ட ஈராக்கின் பாக்தாத் நகரின் கர்ராடா(Karrada) வணிக வளாக பகுதியில் காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்து மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது.
இதில் 323 பேர் வரை கொல்லப்பட்டனர், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டது.
YEHIA RASOOL
2001 அமெரிக்காவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு, இந்த வெடிகுண்டு தாக்குதலில் உலகின் அழிவுகரமான தாக்குதலாக பார்க்கப்பட்டது.
இதனிடையே இந்த வெடிகுண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளை ஈராக் அரசு கைது செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
AFP
தூக்கு தண்டனை நிறைவேற்றம்
இந்நிலையில் 2016 வெடிகுண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தை சந்தித்த ஈராக் பிரதமர் ஷியா அல்-சூடானி குண்டுவெடிப்பில் தொடர்புடைய 3 முக்கிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தார் என அவரது அலுவலகம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |