Brexit... பிரித்தானியாவால் பல மில்லியன் பவுண்டுகள் ஆதாயம் பார்க்கும் ஐரோப்பிய நாடு
பிரித்தானியாவால் சுங்க வரி தொடர்பில் அயர்லாந்து அரசாங்கம் 600 மில்லியன் பவுண்டுகள் தொகை வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுங்க வரிகள் பொருந்தும்
பிரித்தானியாவில் இருந்து ஆடை, உணவு மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரிகள் பொருந்தும் என்பதால் அயர்லாந்தின் வரி ஆதாயம் அதிகரித்துள்ளது.
Brexit முடிவுக்கு முன்னர் பிரித்தானியா சுங்க வரி இல்லாத ஏற்றுமதியை அயர்லாந்துடனும் பிற ஐரோப்பிய நாடுகளுடனும் முன்னெடுத்து வந்தது. ஆனால் போரிஸ் ஜோன்சன் கடுமையான Brexit விதிகளை அமுலுக்கு கொண்டுவந்த பின்னர் ஒற்றைச் சந்தை முறையும் முடிவுக்கு வந்தது.
இதனால் புதிய கட்டுப்பாடுகள், சோதனைகள் மற்றும் சுங்க வரியும் அமுலுக்கு வந்தது. இந்த நிலையில் வெளியான புதிய தரவுகளின் அடிப்படையில், Brexit அமுலுக்கு வந்த பின்னர் 2020 - 20221ல் அயர்லாந்தின் சுங்க வரி வசூல் 90 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
57.6 பில்லியன் பவுண்டுகள் ஏற்றுமதி
2021ல், 178 மில்லியன் யூரோ சுங்க வரி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2019 உடன் ஒப்பிடும்போது சுங்க வருவாய் 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2022ல் இது 80 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அத்துடன் 617 மில்லியன் யூரோ சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2023ல் 72 சதவிகிதம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவில் இருந்து மட்டும் கடந்த ஆண்டு சுங்க வரியாக 264 மில்லியன் யூரோ தொகையை அயர்லாந்து ஈட்டியுள்ளது.
2023ல் மட்டும் அயர்லாந்துக்கு 57.6 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு பிரித்தானியா ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |