கடத்தப்பட்ட 10 லட்சம் லிட்டருக்கும் அதிகமான எரிபொருள்: இரண்டு படகுகள் பறிமுதல் செய்த IRGC
பாரசீக வளைகுடாவில் எரிபொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு படகை ஈரான் பாதுகாப்பு படை மடக்கி பிடித்துள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட கப்பல்
வியாழக்கிழமையன்று ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை(IRGC) பாரசீக வளைகுடாவில் கடல்சார் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சுமார் 10 லட்சம் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை கடத்திச் சென்ற இரண்டு படகுகளை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
Iran’s Revolutionary Guard Corps Navy claimed to have seized two tankers in the Persian Gulf, claiming they carried over one million litres of smuggled fuel. Fifteen foreign crew members were detained as Tehran alleged the vessels were part of an organised smuggling network near… pic.twitter.com/s05ORcVTY0
— Hindustan Times (@htTweets) February 5, 2026
இந்த பறிமுதல் நடவடிக்கை தொடர்பாக IRGC தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஃபார்சி தீவு அருகே இரண்டு கடத்தல் கப்பல்கள் வழிமறிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதையும், அதிலிருந்த 15 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதையும் உறுதிபடுத்தியுள்ளது.
ஈரான் இராணுவத்தினர் விசாரணை
அத்துடன் படகில் இருந்து கைது செய்யப்பட்ட 15 ஊழியர்களும் வெளிநாட்டினர்கள் என IRGC தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று ஈரான் நாட்டு இராணுவத்தினர் வெளியிடவில்லை.

ஆனால், பல மாதங்களாக திட்டமிடப்பட்டு செயல்பட்டு வந்த கடத்தல் கும்பல் இதன் பின்னணியில் இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
மானிய விலையில் ஈரானில் வழங்கப்படும் எரிபொருளை பிற நாடுகளுக்கு கடத்தும் நடவடிக்கையை தடுப்பது மற்றும் கடல்சார் எல்லைகளை பாதுகாப்பது ஆகியவற்றின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |